தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய பிறப்பு குறைபாடுகளுக்கு இது முக்கிய காரணமாகும். கர்ப்பிணிப் பெண்களில் *, கரு இறப்பு அல்லது பிறவி குறைபாடுகளுக்கு ரூபெல்லா காரணமாக இருக்கலாம்.
தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிப் பெண்ணை ரூபெல்லா வைரஸ் தாக்கினால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லது அவரது குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடும்.
கருவில் வளரும் குழந்தைக்குக் பின்வரும் கடுமையான பிறப்பு குறைபாடுகளை உருவாக்கக்கூடிய வைரஸை தாய் கடத்தலாம்:
- இதயப் பிரச்சனைகள்
- செவித்திறன் மற்றும் கண்பார்வை இழப்பு
- அறிவுக் குறைபாடு
- கல்லீரல் அல்லது மண்ணீரல் பாதிப்பு
கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் தொற்று ஏற்பட்டால் இத்தகைய தீவிர பிறப்பு குறைபாடுகள் பொதுவாக ஏற்படலாம். இந்தப் பிறப்புக் குறைபாடுகள் சிஆர்எஸ் அல்லது பிறவி ரூபெல்லா நோய்க்குறி என்று அழைக்கப்படுகின்றன.
*கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு 3 மாதங்களுக்கு முன் எம்எம்ஆர் தடுப்பூசி போட வேண்டும்.